நமது கைகளில்

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 168
விலை ரூ. 150

இலக்கிய அரட்டை என்ற நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். இலக்கிய அரட்டை இல்லாமலாகும் போது இலக்கியம் இனிய விஷயமாக அல்லாமலாகிறது. இலக்கிய நுட்பங்களைக் கற்பது கொண்டாட்டமாக இல்லாமலாகிறது. இணையம் வந்தபின் இலக்கிய அரட்டைக்கு ஒரு புதிய வாசல் திறந்தது. இது உலகளாவிய இலக்கிய அரட்டை; பதிவாகும் அரட்டை. இந்த விவாதங்கள் மூலம் நான் கற்றது அதிகம்; சொன்னவையும் அதிகம். அவற்றில் நேரடியாக வாழ்க்கைபற்றி பேசிய விஷயங்களின் தொகுதி இந்நூல். இதில் நான் பேசியிருப்பவை அன்றாட வாழ்க்கையின் பல முகங்கள். நான் வாழ்க்கையை உலகியல் வெற்றியைக் கொண்டு அளப்பவனல்ல; மகிழ்ச்சியையும் நிறைவையும் கொண்டு அளப்பவன். அப்படி வாழ்க்கையை முழுமையும் மகிழ்ச்சியும் கொண்டதாக ஆக்கக்கூடிய வழிகள் பற்றிய உரையாடல்கள் இவை.

ஜெயமோகன்

ஆகவே கொலை புரிக!

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 160
விலை ரூ. 140

நமக்கு நம்முடைய பண்பாட்டைப் பற்றிய புரிதல் என்பது மிகமிகக் குறைவானதாகவே உள்ளது. நம்முடைய பண்பாட்டின் எல்லைகள் என்ன, சாராம்சமான போக்குகள் என்ன, அதன் அதிகார அடுக்குகள் என்ன - எதுவும் நமக்குத் தெரிந்திருப்பதில்லைநாமறியும் நமது பண்பாடென்பது நம்மைச் சுற்றி இருக்கும் வாழ்க்கையில் இருந்து நாமறியும் சிக்கல்கள் மட்டுமே. நம்முடைய பண்பாட்டை நாம் இன்று அறியும்விதமே மிகச் சிக்கலானது. இன்றைய அரசியல் தேவைகளுக்காகப் பண்பாட்டை திரித்தும் உடைத்தும் பேசுபவர்களிடமிருந்து நாம் துண்டு துணுக்குகளாகவே பண்பாடு பற்றித் தெரிந்துகொள்கிறோம். ஆலயத்தில் இறைவனுக்கு உணவைப் படைப்பதனால் செல்வம் பெருகும் என ஒருவரும் அது உணவை வீணடித்தல் என இன்னொருவரும் சொல்வார்கள். அந்த சடங்கின் வரலாறென்ன, அது நமக்களிக்கும் மனநிலையின் விளைவென்ன என்று நாம் யோசிப்பதில்லைஇக்கட்டுரைகளில் பண்பாட்டு விவாதங்களை வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்த்த முயன்றிருக்கிறேன். நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு சிக்கலுக்கும் பின்னாலிருக்கும் பண்பாட்டு முடிச்சுகளைத் தொட்டுக் காட்டுகிறேன். பண்பாட்டை ஒரு அமைப்பாக அல்லாமல் ஒரு தொடர்ந்த பரிமாணமாகவே பார்க்கிறேன். தன் பண்பாட்டை அறியவும் தன் வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொள்ளவும் முயலும் ஒருவருக்கு இந்நூல் புதிய பார்வைகளை அளிக்கும்.

ஜெயமோகன்

ஓம் சக்தி ஓம் பராசக்தி


லக்ஷ்மி மணிவண்ணன்
கட்டுரைகள்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 256
விலை ரூ. 210

இக்கட்டுரைத் தொகுப்பில், அன்றாட நிகழ்வுகளில் காணக்கூடிய சிறுமைகளில் பெரும் முரண்களை பொருத்திப் பார்க்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன். நாம் சாதாரணமாக ஒதுக்கித்தள்ளும் அன்றாடத்தன்மை கொண்ட கணங்கள் பெரும் அர்த்தப்பாடு கொண்ட கணங்களாக இவருடைய உரையாடல்களில் மாற்றம் கொள்கின்றன. இத்தகைய மாற்றத்தை படைப்பு மனம் மட்டுமே சாத்தியப்படுத்தும் வல்லமை பெற்றது. மற்ற முறைமைகளில் அன்றாட நிகழ்வுகள் மதிப்பிழந்து போகின்றன. இதிலுள்ள எல்லாக் கட்டுரைகளிலும் ஒரு அன்றாடத்தன்மையைப் பார்க்க முடிகிறது. அரசியல் சொல்லாடல்களிலும் சமூக விஞ்ஞான முறைமைகளிலும் சாத்தியப்படாத உண்மைகள் இத்தகைய அன்றாடத்தன்மை சார்ந்த சிந்தனைகளில் வெளிப்படும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன.

ராமாநுஜம்

சிந்துபாத்தின் மனைவி

எஸ். ராமகிருஷ்ணன்
நாடகம்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 80
விலை ரூ. 65

இந்நூலில் மூன்று நாடகங்கள் உள்ளன.
விபரம் தெரிந்த நாள் முதல் ‘தினந்தந்தி’ பத்திரிகையில் வரும் சிந்துபாத்தை வாசித்து வருகிறேன். ஜோர்ஜ் லூயி போர்ஹே, அராபிய இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றில் இரண்டு சிந்துபாத்துகள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டபோதுதான் சிந்துபாத் என்ற கதாபாத்திரத்தின் மீள்புனைவு பற்றிய சாத்தியங்களை யோசிக்க ஆரம்பித்தேன். சிந்துபாத் கடற்பயணம் மேற்கொள்ளும்போது, அவன் மனைவி வீட்டில் என்ன செய்துகொண்டிருப்பாள் என்ற பொறிதான் இந்த நாடகம். பணம் சேர்ப்பதற்காக வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் சிந்து பாத்துகளே; உலகைப் பற்றி கற்பனை செய்துகொண்டு, தனது அறிவாற்றல் ஒடுங்க வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்கள் அனைவரும் சிந்துபாத்தின் மனைவிகளே. இந்த இரு முனைகளுக்குள் இன்றைய நவீன வாழ்க்கையை, அதன் அபத்தங்களை, சவால்களை இந்த நாடகம் முன்வைக்கிறது. மற்ற இரண்டு நாடகங்களில், ‘சவரக் குறிப்புகள்’ நாடகத்தினுள் நாடகம் என்ற லூயி பிராண்டலோவின் வகையைச் சார்ந்தது. ‘பொய்விசாரணை’ அறிவியல் அறிஞர் புரூனோவின் விசாரணையை முன்வைத்து அறிவியலின் வரலாற்றை ஆராய்கிறது. இந்த மூன்று நாடகங்களும் வெவ்வேறு தளங்களில் மானுட வாழ்வின் நெருக்கடிகளைப் பேசுகின்றன. அவற்றின் ஊடாக மதமும் அதிகாரமும் எப்படி தனது ஒடுக்குமுறையை செயல்படுத்துகின்றன என்பதை சுட்டிக் காட்டுகின்றன.

எஸ். ராமகிருஷ்ணன்


சூரியனைச் சுற்றுகிறது பூமி

கலிலியோ - பெர்டோல்ட் பிரக்ட் & கல் - எட்வர்ட் பாண்ட்
மொழிபெயர்ப்பு: எஸ். ராமகிருஷ்ணன்
நாடகம்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 136
விலை ரூ. 110


இரண்டு மொழியாக்க நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஒன்று, பெர்டோல்ட் பிரக்டின் ‘கலிலியோ’; இன்னொன்று, எட்வர்ட் பாண்டின் ‘கல்’. அறிவியலை வாசிக்கும் நாம் அதன் வரலாற்றையும், அதற்குக் காரணமான ஆளுமைகளையும் குறித்து அறிந்து கொள்வதேயில்லை. கலிலியோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட மாமேதை. அரசும் அதிகாரமும் மதமும், அறிவியலை எந்த அளவு ஒடுக்கின என்பதற்கு கலிலியோவின் வாழ்வு ஒரு உதாரணம். கலிலியோவின் இடைவிடாத போராட்டத்தின் வெற்றியே இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான வளர்ச்சி. அந்த அளவில் கலிலியோ நாடகம் மிக முக்கியமான ஒன்று. எட்வர்ட் பாண்ட், புகழ்பெற்ற பிரிட்டீஷ் நாடக ஆசிரியர். ‘கல்’ நாடகம் 1976இல் வெளியானது. இது ஒரு உருவகக் கதை போல அமைந்துள்ளது. இந்த நாடகம் உலகின் பல்வேறு நாடகப்பள்ளிகளில் பாடமாக வைக்கபட்டுள்ளது.

சுவரொட்டி

கலாப்ரியா
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 152
விலை ரூ. 125

தமிழ்ச் சூழலில் அனுபவங்களை எழுதுவது மிகக் குறைவு. அதிலும் லட்சியவாதத்தில் மாத்திரம் தோயாமல், கீழ்மை மேன்மைகளோடு தன்னைப் பதிவுசெய்து கொள்பவர்கள் மிக மிகக் குறைவு. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக் காடின் ‘சிதம்பர நினைவுகள்’ தமிழில் மொழி பெயர்க்கப்பட்டபோது, அதனுடைய வெளிப்படைத் தன்மைக்காகப் பெரிதும் பேசப்பட்டது; வரவேற்கப்பட்டது. கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ அதைவிடப் பல மடங்கு கலையமைதி தோய்ந்த வெளிப்படைத் தன்மை கொண்டது. சினிமாக்களில் சொல்லப்படுகின்ற ஜிக்ஷீவீறீஷீரீஹ் போல கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’, ‘ஓடும் நதி’, ‘உருள் பெருந்தேர்...’ இந்த மூன்றையும் வரிசையாக வைத்து வாசிக்கலாம். அதனுடைய நீட்சியே இந்த ‘சுவரொட்டி’. தனது அனுபவங்களை வெற்றிகரமாக கலையாக்கும்போதே ஒரு கலைஞன் பரிணமிக்கிறான். இந்த ‘சுவரொட்டி’ வழி நாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கலையை, ரசனையை, பகடியை, பகட்டை, சாதாரண / அசாதாரண மனிதர்களின் எழுச்சியை, வீழ்ச்சியை, பகடையாட்டங்களை, ஆடுபவர்களே காய்களாகும் சோகங்களை அறிய முடிகிறது. அனுபவங்களை கலாப்ரியாவினால் அநாயசமாக கலையாக்க முடிகிறது. வெயில் படர்ந்த, 60களின் திருநெல்வேலி தெருக்களில் நம்மால் துல்லியமாக நடமாட முடிகிறது. அந்த தினத்தில், அந்தத் தெருவில் நடந்தவர்களின் முகக் கீறல் உட்பட நமக்குத் துலக்கமாகிறது. அது கலாப்ரியாவின் கலை ஓர்மை.

சாம்ராஜ்

சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்

ந. ஜயபாஸ்கரன்
கவிதை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 64
விலை ரூ. 50


மதுரையை ஆசையின் எல்லையற்ற எல்லையாகவும், திருவிளையாடற் புராணத்தை ஆசையின் எண்ணற்ற படலங்களாகவும் நவீன கவிதைகளில் கையாள்கிறார் ஜயபாஸ்கரன். அவ்வகையில் வருடம் முழுவதும் திருவிழாக்களை காலம்காலமாக பாவிக்கும் வாழ்தலின் ஆசையை வண்ண, வண்ண உணவுகளாக்கிப் பரத்தியிருக்கும் புராணிகம் மற்றும் வேறு காலத்தின் பெருமிதத்தில் திளைக்கும் நரிகள் இன்றும் அடிக்கடி பரிகளாக வேடமிடும் பல அடுக்குகளிலான மதுரையை, ஆசையின் நித்திய குறியீடாக அவர் மாற்றியுள்ளார். தன் அணிகலனான ‘ஆசை’யின் பாம்பால் மீண்டும் ஜயபாஸ்கரன், கவிதைகள் வாயிலாக ஆலவாயை அளக்க முயன்றிருக்கிறார். தமிழ்க் கவிதையெனும் அகன்ற சன்னதியில் மிக அழகிய, ‘சின்ன மோகினி’ உருவமாக ஜயபாஸ்கரன் இருப்பார்.

ஷங்கர்ராமசுப்ரமணியன்

விதி சமைப்பவர்கள்

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 216
விலை ரூ. 190


இணையத்தில் தனிப்பட்ட கடிதங்களுக்கு நான் பதிலளிப்பது பற்றி நிறைய கருத்துக்கள் வந்துள்ளன. அவ்வாறு எழுத்தாளன் எதிர்வினையாற்றத்தான் வேண்டுமா என்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் எதிர்வினையாற்றுவதில்லை; அது எழுத்தாளனின் இயல்பு. என் நோக்கில் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் எனக்கு முன்னோடிகள்; அவர்கள் எதிர் வினையாற்றியவர்கள்இந்த எதிர்வினைகள் என்னைத் தொடர்ந்து என் வாசகர்களுடன் நேரடியான தொடர்பில் வைத்திருக்கின்றன. விதவிதமான வாழ்க்கையனுபவங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் பயணம் செய்ய வைக்கின்றன. ஒவ்வொரு நாளும் மானுடவாழ்க்கை என்ற மாபெரும் நாடகத்தின் பார்வையாளனாக அமர்த்துகின்றன. எழுத்தாளனாக இது எனக்குப் பெரிய சொத்துநான் வாழ்க்கையிலிருந்து அறிந்த சில, எனக்குச் சொல்வதற்காக இருக்கின்றன. அவற்றையே நான் நாவலாக எழுதுகிறேன்; சிறுகதைகளாக்கு கிறேன்; கட்டுரைகளும் உரைகளுமாக வெளிப்படுத்துகிறேன். இந்த உரையாடல்கள் எல்லாமே கட்டுரைகளும் கூடத்தான்இவை வழியாக இன்றைய தமிழ்ச்சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் மனநிலைகளின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கலாம். இவற்றை நான் எதிர்கொள்ளும் விதம் வழியாக நான் வாழ்க்கை பற்றிக் கொண்டிருக்கும் நோக்கு வெளிப்படலாம்நான், வாழ்க்கை ஒரு மாபெரும் கொடை என்ற உணர்வை என் இளமையில் அடைந்தேன். அதைத்தான் இன்றுவரை எல்லாக் கதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளும் அதைத்தான் சொல்கின்றன.

ஜெயமோகன்

எழுதியவனைக் கண்டுபிடித்தல்

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 136
விலை ரூ. 120

ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி. ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான். அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்த காலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும். விளைவாகத் தனக்குரிய படிம மொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இது தான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான்.