ஜெயமோகன்
உரையாடல்
அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 216
விலை ரூ. 190
இணையத்தில்
தனிப்பட்ட கடிதங்களுக்கு நான் பதிலளிப்பது பற்றி
நிறைய கருத்துக்கள் வந்துள்ளன. அவ்வாறு எழுத்தாளன் எதிர்வினையாற்றத்தான்
வேண்டுமா என்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் எதிர்வினையாற்றுவதில்லை;
அது எழுத்தாளனின் இயல்பு. என் நோக்கில்
ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும்
எனக்கு முன்னோடிகள்; அவர்கள் எதிர் வினையாற்றியவர்கள். இந்த எதிர்வினைகள் என்னைத் தொடர்ந்து என்
வாசகர்களுடன் நேரடியான தொடர்பில் வைத்திருக்கின்றன. விதவிதமான வாழ்க்கையனுபவங்கள் வழியாக ஒவ்வொரு நாளும்
பயணம் செய்ய வைக்கின்றன. ஒவ்வொரு
நாளும் மானுடவாழ்க்கை என்ற மாபெரும் நாடகத்தின்
பார்வையாளனாக அமர்த்துகின்றன. எழுத்தாளனாக இது எனக்குப் பெரிய
சொத்து. நான் வாழ்க்கையிலிருந்து அறிந்த சில, எனக்குச்
சொல்வதற்காக இருக்கின்றன. அவற்றையே
நான் நாவலாக எழுதுகிறேன்; சிறுகதைகளாக்கு
கிறேன்; கட்டுரைகளும் உரைகளுமாக வெளிப்படுத்துகிறேன். இந்த உரையாடல்கள்
எல்லாமே கட்டுரைகளும் கூடத்தான். இவை வழியாக இன்றைய தமிழ்ச்சமூகத்தின்
பிரச்சினைகள் மற்றும் மனநிலைகளின் ஒரு
குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கலாம். இவற்றை
நான் எதிர்கொள்ளும் விதம் வழியாக நான்
வாழ்க்கை பற்றிக் கொண்டிருக்கும்
நோக்கு வெளிப்படலாம். நான், வாழ்க்கை ஒரு மாபெரும் கொடை
என்ற உணர்வை என் இளமையில் அடைந்தேன். அதைத்தான் இன்றுவரை எல்லாக் கதைகளிலும் கட்டுரைகளிலும்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளும்
அதைத்தான் சொல்கின்றன.
